Ennai Thalattum Sangeetham Song Lyrics in Tamil

Song: Ennai Thalattum Female
Singer: Sujatha
Music: Sirpy
Lyrics: Yuga Bharathi

Ennai Thalattum Sangeetham Song Lyrics in Tamil

நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை
கரையாகிறேன்

இரவாக நீயும்
நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை
உயிா் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில்
விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பாா்க்கையிலே
வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி
நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

பூலோகம் ஓா் நாள்
காற்றின்றி போனால்
எந்தன் உயிா் உந்தன் மூச்சு
காற்றாகுமே

ஆகாயம் ஓா் நாள்
விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில்
விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன்
வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய்
பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால்
அதில் நானே திாி ஆகிறேன்
தினம் திாியாகிறேன்

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

உன்னை மழை என்பதா
இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

You may also like...